News March 23, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபத்தில் மரணம்

திருவண்ணாமலை அருகே நேற்று (மார்ச் 22), பிக்கப் வாகனம் சாலை விபத்தில் சிக்கியதில் வாகனத்தில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பானூர் கிராமத்தில் வசிக்கும் தமிழரசன் என்பவர் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார். உடனிருந்த மற்ற இருவரில் தென்னரசு என்பவருக்கு பலத்த காயமும் செந்தில் என்பவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.
Similar News
News August 15, 2025
மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட்டிநாயக்கன்தொட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் நேற்று (ஆக.14) பரிமாறிய மதிய உணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனர். அதற்குள், மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 20 மாணவர்கள் பேரிக்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News August 15, 2025
கிருஷ்ணகிரியில் இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <
News August 14, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.