News February 7, 2026
கிருஷ்ணகிரி: பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி!

போச்சம்பள்ளி, காட்டுக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சத்தியகுமார்(30), விடுமுறையில் ஊர் திரும்பியிருந்தார். கடந்த பிப்.4-ம் தேதி, தனது மனைவி திவ்யா & குழந்தைகளுடன் டூவீலரில் காய்கறி வாங்கிவிட்டு சென்றாயன்பட்டி பகுதியில் வந்தபோது, தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பின், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மனைவி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 17, 2026
ஓசூர்: நள்ளிரவில் பயங்கர விபத்து!

பெங்களூரை சேர்ந்த அஜய்குமார் குடும்பத்துடன் பிப்ரவரி 15-ம் தேதி இரவு காரில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டேனூர் அருகே சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் பின்னே வந்த கார் லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த அஜய்குமார், சீனிவாச மூர்த்தி, சுனந்தா, சிவகுமார் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
News February 17, 2026
கிருஷ்ணகிரியில் பெண் விபரீத முடிவு; அதிர்ச்சி பின்னணி!

அஞ்செட்டி அருகே மாவணட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி மாதேவன்- வெண்ணிலா (34). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர் தகராறால் மனமுடைந்த வெண்ணிலா நேற்று (பிப்.16) விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெண்ணிலா இறந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 17, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.17) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்


