News December 18, 2025
கிருஷ்ணகிரி: பெற்றோர் திட்டியதால் மகன் தற்கொலை!

ஓசூர் மூக்கண்டப்பள்ளி கோபாலப்பா நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது ஹர்ஷீப் பிரணவ், 11-ம் வகுப்பு மாணவர், அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோரிடம் திட்டு வாங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு ரூ.31,000 மானியம்!

கிருஷ்ணகிரி மக்களே.. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் இங்கு <
News December 20, 2025
கிருஷ்ணகிரி: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (டிச- 20) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஎல்ஏ, பரந்தப்பள்ளி, கல்லாவி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திராபட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ராஜாஜி நகர், ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டினாயனஹள்ளி, கே.ஆர்.பி அணை, ஆலப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
News December 20, 2025
கிருஷ்ணகிரி: மன வேதனையில் இளம்பெண் தற்கொலை!

கிருஷ்ணகிரி பழையம்பேட்டை பகுதியில் பாருக்கு மற்றும் அவரின் மனைவி முபீன்தாஜ் இருவரும் திருமணம் செய்து 2 வருடமாகிறது. இதில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனையால் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த பெண் தன் தாய் வீட்டிற்கு சென்று அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


