News December 29, 2025

கிருஷ்ணகிரி: பெண்ணை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது!

image

காவேரிப்பட்டணம் அருகே மேட்டுபள்ளத்தை சேர்ந்த விவசாயி சரசு (65) மற்றும் மாதேசன் (56) ஆகியோருக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (டிச.28) ஏற்பட்ட தகராறில் சரசுவை மதீசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சரமாரியாக ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

Similar News

News December 31, 2025

கிருஷ்ணகிரி: புதிய தொழில் தொடங்க ஆசையா?

image

கிருஷ்ணகிரி மக்களே! நம்மில் பலரும் சரியான வேலை அமையாமல் அல்லற்பட்டு வருகிறோம். இந்த நிலையில்தான் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்திருந்தால் கூட தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 45 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு தகுதிப்படைத்தவர்கள் ஆவர். இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News December 31, 2025

கிருஷ்ணகிரி: 10Th போதும் Post Office-ல் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் மூலம்<<>> விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 31, 2025

கிருஷ்ணகிரி: சாலையில் இளைஞர் துடி துடித்து மரணம்!

image

பெரியகுத்தி அருகே நாகமலை கிராமத்தில் வசித்து வரும் முருகன் என்ற இளைஞர் நேற்று (டிச – 30) மாலை 7 மணிக்கு தங்கைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தங்கையை மருத்துவமனையில் விட்டு விட்டு நாகமலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது சின்னகுத்தி அருகே சாலையில் எதிரே வந்த பிக்கப் வாகனத்தில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

error: Content is protected !!