News December 20, 2025

கிருஷ்ணகிரி: தெருநாய் கடித்து தூய்மை பணியாளர் காயம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். விஜய் நகர் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள தெரு நாய் ஒன்று அவரைக் கடித்துள்ளது. இதில் முருகம்மாள் படுகாயமடைந்தார். சக பணியாளர்கள் அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 22, 2025

கிருஷ்ணகிரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

கடன் செயலி (Loan App) மோசடிகளிடம் எச்சரிக்கையாக இருக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. RBI அங்கீகாரம் பெற்ற செயலிகளை மட்டும் பயன்படுத்துமாறும், புகைப்படங்களைச் சிதைத்து மிரட்டும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. நிதி சார்ந்த சைபர் குற்றங்களுக்கு உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்து அல்லது இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News December 22, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (டிச-22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

கிருஷ்ணகிரி: தேர்வு இல்லாமல் அரசு வங்கியில் வேலை

image

கிருஷ்ணகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. எழுத்து தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!