News March 8, 2026
கிருஷ்ணகிரி: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
Similar News
News March 8, 2026
கிருஷ்ணகிரி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
கிருஷ்ணகிரி: கட்சித் தாவிய 300 பேர்

காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியம், பண்ணிஅள்ளி ஊராட்சியில், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சபரி மற்றும் காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணன் ஏற்பாட்டில், நேற்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், மாவட்ட கழக செயலாளர் மதியழகன் MLA முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்துக் கொண்டனர்.
News March 8, 2026
கிருஷ்ணகிரியில் அதிரடி கைது

கிருஷ்ணகிரி ஐந்து ரோடு சாலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாகித் அன்வர் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 2,000 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


