News March 22, 2024
கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அருண் (24), மேஸ்திரி. இவருக்கு தர்ஷன் (3) என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்ஷன் அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாரதவிதமாக தவறிவிழுந்தது. குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
Similar News
News February 14, 2026
கிருஷ்ணகிரி:காவலருக்கு குவியும் பாராட்டு..!!

சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் பிப்-13ல் தனியார் தொழிற்சாலை மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தின்போது பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் உடைந்த பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன.
இவற்றை காவலர் ஒருவர் சீருடையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் சாலையைச் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் பலரும் அந்த காவலருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.!
News February 14, 2026
கிருஷ்ணகிரியில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டக் குறைதீர்க்கும் முகாம் இன்று (பிப்.14) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 8 வட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் இம்முகாம் நடைபெறும். இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு போன்ற திருத்தங்களைச் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆறிவிப்பு.
News February 14, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர காவல் அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (13.02.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


