News January 19, 2026

கிருஷ்ணகிரி: செவிலியர் துறையில் 999 பணியிடங்கள் APPLY NOW

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News February 3, 2026

கிருஷ்ணகிரி: மரத்தில் சொருகிய பைக்; பறிபோன உயிர்!

image

தளி அடுத்த உனிசெந்தம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மனோஜ் (16), நேற்று (பிப்.2) அதே பகுதியை சேர்ந்த பவன் குமாருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது கோபசந்திரம் அருகே சென்ற போது பைக் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பவன்குமார் படுகாயம் அடைந்த நிலையில் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

கிருஷ்ணகிரி: பாட்டியை ஜேசிபி ஏற்றி கொன்ற கொடூரன்!

image

ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ராணி. இவர் தன்னுடைய பேரன் சிரஞ்சீவிக்கு (28) சில நாட்களுக்கு முன் ஜேசிபி இயந்திரம் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் வண்டிக்கான கடன் தவணையை ராணி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, ஜேசிபி இயந்திரத்தாலேயே தனது பாட்டியைத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் சிரஞ்சீவியை கைது செய்தனர்.

News February 3, 2026

ஓசூர் அருகே சோழர் கால கோயில் கண்டுபிடிப்பு

image

ஓசூர் அடுத்துள்ள பெகிலி என்ற ஊரில் மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையிலும், மரங்களால் சூழப்பட்ட நிலையிலும் சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிற்காலச் சோழர் கால கோயில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் இக்கோயிலை காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி கண்டுபிடித்துள்ளார்.

error: Content is protected !!