News December 6, 2025
கிருஷ்ணகிரி: கஞ்சா செடி வளர்ப்பு.. போலீஸ் அதிரடி

அஞ்செட்டி அருகே கெஸ்தூர் என்ற கிராமத்தில் தேவராஜ் என்பவரின் விவசாய நிலத்தில் கஞ்சா செடி ஒன்று வளர்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அஞ்செட்டி காவல் ஆய்வாளர் சுமித்ரா தலைமையில் காவலர்கள் டிசம்பர் 5.12.25 மதியம் 2 மணி அளவில் தேவராஜின் விவசாய நிலத்தில் சோதனை செய்தபோது கஞ்சா செடி ஒன்று வளர்த்து வந்துள்ளது தெரிய வந்தது. காவல் நிலையம் எடுத்து வந்து தேவராஜை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
கிருஷ்ணகிரி: Whats App மூலம் ஆதார் அட்டை

கிருஷ்ணகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 6, 2025
கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கிருஷ்ணகிரியில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. அதன்படி, ஓசூர், குருபரப்பள்ளி, ஜூஜூவாடி, பேகப்பள்ளி, ஊத்தங்கரை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும். மேலும் எந்தஎந்த பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும் என்பதை <
News December 6, 2025
ஒசூரில் கார் ஓட்டுநர் கொலை வழக்கு.. 7 பேர் கைது

ஒசூர் அருகே உள்ள மாரசந்திரத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (32). கார் ஓட்டுநர் இவர் கடந்த 3-ஆம் தேதி காலை ஒசூரில் வானவில் நகர் அருகே வெட்டிக் கொலை சடலம் கிடந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அட்கோ போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் ஹரீஷுக்கும், ஒசூர் சேர்ந்த மஞ்சுளா (35) என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. வழக்கில் மஞ்சுளா உள்பட 7 பேரை போலீஸார் நேற்று (டிச.5) கைது செய்தனர்.


