News December 18, 2025
கிருஷ்ணகிரி: ஓடும் லாரியில் பற்றிய தீ!

பால தொட்டனபள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியிலிருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் செல்வதற்காக சாலையில் இன்று 18.12.25 இரவு 2 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஜார்கலப்பட்டி கிராமம் அருகே சென்ற வண்டியில் இருந்து புகை வருவதை அறிந்து டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார். கீழே இறங்கி பார்த்தபோது லாரி தீ பிடித்ததை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
Similar News
News December 24, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேடப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (50) என்ற கூலித் தொழிலாளி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் – பேரிகை சாலையில் கொளதாசபுரம் அருகே நேற்று (டிச.23) டூவீலரில் சென்றபோது, அவ்வழியாக வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 24, 2025
கிருஷ்ணகிரியில் பயங்கர தீ!

சிப்காட், இஎஸ்ஐ ரிங் ரோடு மஞ்சுநாத் லேயவுட் அருகே உள்ள தனியார் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. குடோனில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று(டிச.23) காலை ஒன்பது மணி அளவில் மின் கசிவு ஏற்பட்டு குடோன் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
News December 24, 2025
கிருஷ்ணகிரியில் பயங்கர தீ!

சிப்காட், இஎஸ்ஐ ரிங் ரோடு மஞ்சுநாத் லேயவுட் அருகே உள்ள தனியார் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. குடோனில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று(டிச.23) காலை ஒன்பது மணி அளவில் மின் கசிவு ஏற்பட்டு குடோன் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


