News April 6, 2024
கிருஷ்ணகிரி: ஏடிஎம் உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

குருபரப்பள்ளி கிராமத்தில் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் நேற்று ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நிரப்பியுள்ளார்கள். நேற்று இரவு ஏடிஎம் வெல்டிங் இயந்திரத்தை மூலம் உடைத்து மர்ம நபா்கள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பொது மக்களின் தகவலின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
கிருஷ்ணகிரி: தெருநாய் கடித்து தூய்மை பணியாளர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். விஜய் நகர் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள தெரு நாய் ஒன்று அவரைக் கடித்துள்ளது. இதில் முருகம்மாள் படுகாயமடைந்தார். சக பணியாளர்கள் அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 20, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம்- ஓர் பார்வை

1.நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
2. மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
3.பேரூராட்சிகள்- 06
4.வருவாய் கோட்டம்- 2
5.தாலுகா-8
6.வருவாய் வட்டங்கள் – 8
7.வருவாய் கிராமங்கள்-636
8.ஊராட்சி ஒன்றியம்-10
9.கிராம பஞ்சாயத்து- 333
10.MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
11.MLA தொகுதி- 6
12.மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News December 20, 2025
கிருஷ்ணகிரியில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

கிருஷ்ணகிரி மக்களே, அடிக்கடி வீட்டில் கரண்ட், வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


