News February 7, 2026

கிருஷ்ணகிரி: உயிருக்கு ஆபத்தான நிலையில் இரட்டை குழந்தைகள்

image

பர்கூர் அருகே, கடந்த பிப்.5 தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 2 வயது இரட்டைக் குழந்தைகள், அங்கிருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்துத் தவறுதலாக உட்கொண்டனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்கள், தற்போது பெங்களூரு இந்திரா காந்தி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 10, 2026

கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

கிருஷ்ணகிரி காவல்துறை விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது விபத்துகளின் போது தலைக்கு ஏற்படும் கடுமையான காயங்களைத் தடுக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. “தலையை அல்ல, ஹெல்மெட்டை காயப்படுத்துங்கள்” என்ற வாசகத்துடன் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News February 10, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு !

image

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்ட (KRP) அணையின் நீர்மட்டம் இன்று (பிப்.8) 49.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 295 கனஅடி நீர் வரத்து கிடைக்க, 179 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது 1,363 எம்.சி.அடி நீர் சேமிப்பு இருப்பதால், விவசாயம் மற்றும் பிராந்திய குடிநீர் தேவைக்கு நிலையான நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!