News January 19, 2026
கிருஷ்ணகிரி: உடல் கருகிய நிலையில் ஆண் சடலம்!

சூளகிரி அடுத்த சின்னார் பேடப்பள்ளி கிராமத்தில் இன்று (ஜன.19) காலை வயல்வெளியில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
ஒசூர் புதிய மாவட்ட மருத்துவமனை திறப்பு!

ஒசூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.16) காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இப்பகுதி மக்களின் உயர்தர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
News February 16, 2026
ஓசூரில் துணிகர சம்பவம்!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த உதயகுமார் (22) ஓசூரில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நபர் உதயகுமாரை மிரட்டி ரூ.300 மற்றும் செல்போனை வழிப்பறி செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்த உஸ்மர் (24) என்பது தெரியவந்தது.
News February 16, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்றைய (பிப்.16) நீர்மட்டம் 49.3 முதல் 49.55 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்


