News February 28, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

கிருஷ்ணகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

ஓசூர்: சாதனைகளை அள்ளி தெளித்த MLA!

image

ஒசூா்: திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ”ஒசூரில் ரூ.100 கோடியில் தலைமை மருத்துவமனை, ரூ.550 கோடியில் சாக்கடை திட்டம், ரூ.50 கோடியில் பேருந்து நிலையம், ரூ.250 கோடியில் சாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயா்த்தியது உள்ளிட்ட ரூ.3000 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன” எனக் கூறியுள்ளார்.

News March 1, 2026

கிருஷ்ணகிரியில் பயங்கர தாக்குதல்!

image

கந்திகுப்பம் அடுத்த அழகிய புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டு பிரகாஷை பீர் பாட்டிலால் பாபு தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பாபு உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!