News February 26, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (பிப்.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 26, 2026

ஓசூரில் லாரி தீப்பற்றி எரிந்து பெரும் விபத்து!

image

ஓசூர் ரிங் ரோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவியதால் அதிர்ச்சியடைந்த டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர், இருப்பினும் லாரி கடுமையாக சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2026

கிருஷ்ணகிரி: வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்புரா மாநிலத்தை சேர்ந்த பிஷால் தார். இவர் ஓசூரில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிப்-24 இவருக்கும் இவருடைய காதலிக்கும் இடையே போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2026

கிருஷ்ணகிரி: பட்டாக்கத்தி இளைஞர்கள் மீது குண்டர் சட்டம்

image

காவேரிப்பட்டினத்தில் பிப்-16 ஆம் தேதி நடைபெற்ற அங்காளம்மன் மயானக்கொள்ளை விழாவில் கும்பலாக சேர்ந்து பட்டா கத்தியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை தாக்குதல் நடத்திய ஆகாஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பிப்-25 ஆகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் மீதும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!