News January 30, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை வரை (ஜன -30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 9, 2026

கிருஷ்ணகிரி: மிரண்டு வந்த மாடு; பறிபோன உயிர்!

image

ராயக்கோட்டையை சேர்ந்தவர்கள் சிவப்பிரகாஷ் (26), பிரியதர்ஷினி (18), மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள சந்தையில் சிவப்பிரகாஷ், பிரியதர்ஷினி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது செந்தில் (29) என்பவரது மாடு மிரண்டு ஓடி வந்து அவர்கள் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரியதர்ஷினி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பிரியதர்ஷினி உயிரிழந்தார்.

News February 9, 2026

கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷ்ணகிரியில் மாவட்டத்துக்குட்பட்ட பென்னேஸ்வரம் மற்றும் பர்கூர் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (பிப்.9) காலை 9 முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பார்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, கரகுப்பம் மற்றும் காவேரிப்பட்டணம், தள்ளிஹல்லி, பென்னேஸ்வரம் மடம் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும். SHARE IT!

News February 9, 2026

கிருஷ்ணகிரி: கழுத்து அறுத்து கொடூர கொலை!

image

வேப்பனப்பள்ளியை சேர்ந்த மூதாட்டி சின்னம்மா (70). இவர் நேற்று (பிப்.8) மாலை கிராமத்தின் அருகே உள்ள செங்கல் சூளையில் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது காதுகளை வெட்டப்பட்டு, இரண்டு தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதயடுத்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!