News October 22, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (21.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 22, 2025
கிருஷ்ணகிரி: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
கிருஷ்ணகிரி: 4 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கிருஷ்ணகிரியை அடுத்த புதிய பாஞ்சாலியூா் யாசின் நகரைச் சோ்ந்த எல்லம்மாள் (50), அவரது மகள் சுசிதா (13) ஆகியோரை கடந்த 26-ஆம் தேதி கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த வழக்கில் நவீன்குமாா் (21), சத்தியரசு (24), ரக்ஷித் (21), பருவீதி கிராமத்தைச் சோ்ந்த ஆதி (20) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News October 22, 2025
கிருஷ்ணகிரி: பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி: திருப்பத்துாரிலிருந்து பர்கூர் செல்லும் ‘பி6’ டவுன் பஸ் நேற்று (அக்.21) பர்கூர் நோக்கி வந்தது. பேருந்து பர்கூர் வந்ததும், அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது மதுபோதையில் இருந்த அபிஷேக், யஷ்வந்த் ஆகிய இளைஞர்கள் இறங்க மறுத்து நடத்துனரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடத்துனர் அளித்த புகாரின் பெயரில் போதை ஆசாமிகள் 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.