News December 20, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் தறிகெட்டு ஓடிய கார்; 6 பேர் படுகாயம்!

விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரதீபா (24) என்பவர் விஜயவாடாவை சேர்ந்த அபிஷேக்குடன் ( 23) காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்தங்கரை அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகே இருந்த இறைச்சி கடையில் போய் சொருகியது. இதில் இறைச்சி வாங்க வந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் அடித்தே கொலை!

கோனேகானப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முனிமாரப்பா (41). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முனிகிருஷ்ணப்பாவுக்கும் இடையே வழிபாதை தொடர்பாக தகராறு இருந்தது. இதில் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணப்பா கடந்த 21-ந் தேதி முனிமாரப்பாவை கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முனிகிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.
News January 26, 2026
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி காவலர்கள் பட்டியல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 25.1.26 இரவு முதல் இன்று காலை வரை காவல்துறை ரோந்து பணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு அவசர உதவிக்கு அலைபேசி எண்கள் மற்றும் காவலர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏதாவது பொதுமக்களுக்கு உதவி ஏற்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க


