News June 22, 2024
கிருஷ்ணகிரி ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோதமான மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, கல்லுாரி, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடைபெற்றது.
Similar News
News September 10, 2025
கிருஷ்ணகிரி: மின் துறையில் SUPERVISOR வேலை!

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <
News September 10, 2025
சூளகிரி: திரௌபதியம்மனை 14கிராம மக்கள் வழிபாடு!

சூளகிரி அடுத்த பந்தர் குட்டை கிராமத்தில் 14ஊர் கிராம மக்கள் சார்பாக திரௌபதியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு கிராம மக்கள் சார்பில் விஷேச பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குவது வழக்கம் என்கிற நிலையில் முருக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தலையில் சீர் சுமத்தப்படி கோயிலுக்கு வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
News September 10, 2025
பாலியல் தொல்லை.. எம்எல்ஏ உதவியாளர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் கால்வேஹள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உதவியாளர் அதியமான், ஹசன் அலி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, எம்.எல்.ஏ., மதியழகன் தன் உதவியாளர் பணியில் இருந்து அதியமானை நேற்று நீக்கினார்.