News November 5, 2025
கிருஷ்ணகிரி: ஆசிரியருக்கு பாய்ந்த போக்சோ

கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் நேற்று (நவ.04) கைவினை கலை ஆசிரியரான சின்னமட்டாரப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (49), மாணவியரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதன்படி பள்ளி சி.இ.ஓ விசாரணை செய்தபோது மாணவியின் புகார் உண்மை என தெரியவந்தது. பின் முருகேசனை பர்கூர் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
Similar News
News November 5, 2025
கிருஷ்ணகிரியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<
News November 5, 2025
கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் 6,000 பேர், லாலிக்கல் அருகே ‘விடியல்’ என்ற பெயரில் நிறுவனம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். இந்நிலையில் 8வது பிளாக் குளியலறைகளில், ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை, கவனித்த தொழிலாளர்கள் நேற்று (நவ.04) போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் ஓசூர் போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.
News November 5, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


