News August 24, 2024

கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி தற்கொலை 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஒரே சமூகத்தை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, 17 வயது கல்லூரி மாணவி இருவரும் காதலித்தனர். மாணவியின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கொத்தாலம் கிராமத்தில் உள்ள நரசிம்மமூர்த்தி வீட்டில் இருவரும் தூக்கில் தொடங்கியபடி சடலமாக இன்று காலை 11 மணிக்கு மீட்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 7, 2026

கிருஷ்ணகிரி: பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி!

image

போச்சம்பள்ளி, காட்டுக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சத்தியகுமார்(30), விடுமுறையில் ஊர் திரும்பியிருந்தார். கடந்த பிப்.4-ம் தேதி, தனது மனைவி திவ்யா & குழந்தைகளுடன் டூவீலரில் காய்கறி வாங்கிவிட்டு சென்றாயன்பட்டி பகுதியில் வந்தபோது, தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பின், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மனைவி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 7, 2026

கிருஷ்ணகிரியில் 5 மாத பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு!

image

காவேரிப்பட்டினம் அடுத்த பந்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் இவருக்கு 5 பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிப்-05 உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த வீட்டில் இருந்து போது குழந்தை திடீரென பிப்-06 உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 7, 2026

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று (பிப்.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!