News May 15, 2024

கிருஷ்ணகிரி அருகே இளைஞர் தற்கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (27) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு ஊத்தங்கரை போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் சடலம் பெற்றோர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News July 11, 2025

புகையிலை பெருட்கள் கடத்தியவர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடியில் போலீசார் நேற்று (ஜூலை 9) வாகன சோதனை செய்தபோது, ரூ.1,42,656 மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2,015 மதிப்பிலான மதுபானம் கண்டறியப்பட்டது. அவற்றை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு, பொருட்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

News July 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 10) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News July 10, 2025

எவ்வளவு கடன் உதவி பெறலாம்? 2/2

image

சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அதேபோல் குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,25,000-மும், அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15 லட்சமும் வழங்கப்படும். விண்ணப்பத்தை <>இந்த <<>>லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு (04343-235655, 04343-239301-02) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!