News February 24, 2026
கிருஷ்ணகிரி: அரசு ஊழியர் கொலை; 6 பேருக்கு ஆயுள்

தேன்கனிக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் (37), நிலம் விற்ற பணம் ரூ.30 லட்சத்தைத் திரும்பக் கேட்டதற்காக 2017-ல் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிகளான மகேஷ்குமார் உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும் விதித்து நேற்று (பிப்.23) தீர்ப்பளித்தது.
Similar News
News March 1, 2026
கிருஷ்ணகிரியில் பெண் துடிதுடித்து பலி!

காட்டிநாயனப்பள்ளியைச் சேர்ந்தவர் மோலுகம்மா. இவர் நேற்று முன்தினம் கிராமத்தின் அருகே சாலையோரத்தில் நடத்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அருண்குமார் என்பவர் மோதியதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 1, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவல்துறை காவலர்களின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்ட உட்கோட்ட பகுதிகளில் நேற்று (28.02.26) இரவு முதல் இன்று காலை வரை காவல்துறை ரோந்து பணிக்கான காவலர்களின் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளில் இரவு நேர ரோந்து போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களின் அலைபேசி எண்களும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.
News February 28, 2026
கிருஷ்ணகிரி: குடும்பத்தில் பிரச்னையா?

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 6379860065 -ஐ அழைத்து புகார் அளிக்கலாம். *இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


