News August 23, 2025

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (ஆக.22) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இழப்பீட்டு மானியத் தொகையை வரும் 15 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

கிருஷ்ணகிரி விமான நிலையம் குறித்து புதிய UPDATE!

image

தமிழ்நாடு அரசு பேரிகை–பாகலூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான, இடத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரிலுருந்து பேரிகை 25 KM, பாகலூர் 12 KM தொலைவில் உள்ளது. அத்திப்பள்ளியில் இருந்து 19 KM தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் எவ்வளவு நிலம் தேவை என்பதற்கான ஆய்வு நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

கிருஷ்ணகிரியில் நாளை மரபுச் சந்தை

image

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் 181-வது மரபுச் சந்தை, நாளை (ஆக.24) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலக மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகள், பசு நெய், தேன், ஊறுகாய், தின்பண்டங்கள் மற்றும் ரசாயனமில்லா காய்கறிகள் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

News August 23, 2025

போச்சம்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்.

image

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிகரம் அரிமா சங்கம் மற்றும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் இருதய மருத்துவமனை இணைந்து, நாளை (ஆக.24) இலவச இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. அரசம்பட்டி ஏ.கே.ஜி. திருமண மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், சர்க்கரை மற்றும் இருதயப் பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்படுகின்றன. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!