News June 23, 2024

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளர் அறிவொளி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 48 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது அணைக்கு 250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது முதல்போக சாகுபடிக்கு போதுமானதாக இருப்பதால், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News September 10, 2025

கிருஷ்ணகிரி: மின் துறையில் SUPERVISOR வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு<<>> கிளிக் செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். கடைசி தேதி 17.09.2025 ஆகும். நாமக்கல் மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 10, 2025

சூளகிரி: திரௌபதியம்மனை 14கிராம மக்கள் வழிபாடு!

image

சூளகிரி அடுத்த பந்தர் குட்டை கிராமத்தில் 14ஊர் கிராம மக்கள் சார்பாக திரௌபதியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு கிராம மக்கள் சார்பில் விஷேச பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குவது வழக்கம் என்கிற நிலையில் முருக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தலையில் சீர் சுமத்தப்படி கோயிலுக்கு வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

News September 10, 2025

பாலியல் தொல்லை.. எம்எல்ஏ உதவியாளர் கைது!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கால்வேஹள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உதவியாளர் அதியமான், ஹசன் அலி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, எம்.எல்.ஏ., மதியழகன் தன் உதவியாளர் பணியில் இருந்து அதியமானை நேற்று நீக்கினார்.

error: Content is protected !!