News January 27, 2026
கிருஷ்ணகிரியில் மூதாட்டி திடீர் மரணம்!

ஓசூர் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் சரோஜா 60. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) வீட்டில் இருந்து வெளியே சென்ற போது திடிரென மூக்கண்டப்பள்ளி சாலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
கிருஷ்ணகிரி: உயிருக்கு ஆபத்தான நிலையில் இரட்டை குழந்தைகள்

பர்கூர் அருகே, கடந்த பிப்.5 தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 2 வயது இரட்டைக் குழந்தைகள், அங்கிருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்துத் தவறுதலாக உட்கொண்டனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்கள், தற்போது பெங்களூரு இந்திரா காந்தி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 7, 2026
கிருஷ்ணகிரி: பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி!

போச்சம்பள்ளி, காட்டுக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சத்தியகுமார்(30), விடுமுறையில் ஊர் திரும்பியிருந்தார். கடந்த பிப்.4-ம் தேதி, தனது மனைவி திவ்யா & குழந்தைகளுடன் டூவீலரில் காய்கறி வாங்கிவிட்டு சென்றாயன்பட்டி பகுதியில் வந்தபோது, தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பின், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மனைவி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 7, 2026
கிருஷ்ணகிரியில் 5 மாத பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு!

காவேரிப்பட்டினம் அடுத்த பந்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் இவருக்கு 5 பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிப்-05 உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த வீட்டில் இருந்து போது குழந்தை திடீரென பிப்-06 உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


