News January 19, 2026
கிருஷ்ணகிரியில் மின் தடை: உங்க ஏரியா இருக்கா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.20) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பரண்டூர், நாகொண்டபள்ளி, கோபனபள்ளி, கூலிசந்திரம், முதுகனபள்ளி, செட்டிபள்ளி, மாசினாயக்கன்பள்ளி, உத்தனபள்ளி, அகாரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லரலபள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுக்குறுக்கை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான இணைய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இணையதளங்களில் உள்நுழையும் போது ‘Keep me logged in’ அல்லது ‘Remember me’ போன்ற வசதிகளை குறிப்பாக பொது கணினிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்தால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
News March 10, 2026
கிருஷ்ணகிரி போலீஸ் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு எதிராக மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் தீவிர விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. “மது உடல்நலத்திற்கு கேடு, புகை உயிரைக் கொல்லும்” என எச்சரித்துள்ள போலீசார், ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
News March 10, 2026
பர்கூர் துணி இதனால்தான் இவ்வளோ ஃபேமஸா?

கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பர்கூர். இங்கு 75 ஆண்டு காலமாக துணி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் துணி வாங்க வந்து செல்கின்றனர். மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளதே மக்கள் குவிய காரணம். இதனால் இது ‘குட்டி சூரத்’ என்றழைக்கப்படுகிறது.


