News January 21, 2026
கிருஷ்ணகிரியில் மனதை உலுக்கும் சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியைச் சேர்ந்த காயத்ரி (16) என்ற சிறுமி, நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த காயத்ரி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
கிருஷ்ணகிரி: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News February 7, 2026
கிருஷ்ணகிரி பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி! APPLY NOW

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் ஊராட்சி கே.ஆர்.பி அணை வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சிபெற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 18- 45 வயது வரை உள்ள பெண்கள் பிப்.09க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9080676557 என்ற எண்ணில் தொடர் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் IT
News February 7, 2026
கிருஷ்ணகிரி: காட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி

தேன்கனிகோட்டை அடுத்த ஜர்காலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் 42, விவசாயி, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் நேற்று பிப்-06 கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


