News January 23, 2026

கிருஷ்ணகிரியில் பரிதாப பலி!

image

கங்கசந்திரத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை வேடிக்கை பார்க்கச் சென்ற லட்சுமி நாராயணன் (56) என்ற தொழிலாளி, மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். ஏற்கெனவே கடந்த 17-ஆம் தேதி காவேரிப்பட்டணம் அருகே இளவரசன் என்பவர் இதேபோல் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாவது பலியாக லட்சுமி நாராயணன் மரணமடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 25, 2026

கிருஷ்ணகிரி: தொழிலாளி மரணம்; தொடரும் மர்மம்!

image

போச்சம்பள்ளியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி வேலாயுதம் (40). இவர் தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அங்குள்ள கரும்பு அரவை கூடத்தில் தூங்க சென்ற வேலாயுதம் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

ஓசூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

image

ஓசூர் பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை (ஜன.26) குடியரசு தினம் கொண்டாடுவதை ஒட்டி, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. ஸ்ரீதரன் தலைமையில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன. மேலும், ஜூஜூவாடி உள்ளிட்ட மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையைப் பலப்படுத்திச் சோதனை செய்து வருகின்றனர்.

News January 25, 2026

கிருஷ்ணகிரி: வாலிபர் துடிதுடித்து பலி!

image

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அகிலேஷ் (35). இவர், உத்தனப்பள்ளி அருகே பாத்தக் கோட்டா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை நிறுவனத்தில் இருந்த எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதை அறியாத மற்றோரு தொழிலாளி எந்திரத்தை இயக்க அகிலேஷ் எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!