News March 1, 2026
கிருஷ்ணகிரியில் பயங்கர தாக்குதல்!

கந்திகுப்பம் அடுத்த அழகிய புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டு பிரகாஷை பீர் பாட்டிலால் பாபு தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பாபு உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
கிருஷ்ணகிரி : இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

கிருஷ்ணகிரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <
News March 6, 2026
கிருஷ்ணகிரி: குஷியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கான விற்பனை மதி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் நேற்று திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் ஊரக வாழ்வாதார இயக்குநர் பெரியசாமி கலந்து கொண்ட நிலையில்,விற்பனை தொடங்கியது.
News March 6, 2026
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்தர்ஜித் அவருடைய நண்பர் நிரஞ்சன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடிரென இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் தவறி விழுந்தது. இதில் நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தர்ஜித் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


