News January 22, 2026
கிருஷ்ணகிரியில் நாளை கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.23) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதன்படி கிருஷ்ணகிரி நகரம், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு, கலெக்டர் அலுவலகம், ஓல்ட்பேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கதேரி, ஆலப்பட்டி, சூலக்குண்டா ஆகிய பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Similar News
News January 30, 2026
கிருஷ்ணகிரி: தீ விபத்தில் துடி துடித்து பலி!

நாகரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (73). இவர் கடந்த ஜனவரி 22-ம் தேதி தோட்டத்தில் குப்பைகளுக்கு தீ வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது தீ பரவியது. இதில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன.30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
கிருஷ்ணகிரி: குடியால் பறிபோன உயிர்!

தருமபுரியை சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஷ் (39). இவர் ஓசூரில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு தொடர் குடி பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) அக்ரஹாரம் பகுதியில் நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 30, 2026
கிருஷ்ணகிரி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

கிருஷ்ணகிரி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


