News January 14, 2026
கிருஷ்ணகிரியில் தொழிலாளி துடிதுடித்து பலி!

ஓசூர் அடுத்த ஜூஜூவாடியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சீனிவாசன் (47). இவர் கடந்த 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பெங்களூரு-ஓசூர் சாலையில் சேற்று கொண்டிருந்தார். அப்போது ஜூஜூவாடி அருகே அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குளானது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவி ஷாலினி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்க விருப்பமில்லை என கூறப்படும் நிலையில் நேற்று (ஜன.21) வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
கிருஷ்ணகிரி: கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம்!

ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளி காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருபவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராமன்னா (45). இவர் நேற்று (ஜன.21) இரவு சந்தையில் கடையின் முன்பு தூங்கியுள்ளார். ஆனால் இன்று காலை (ஜன.22) இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
கிருஷ்ணகிரி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <


