News February 6, 2026

கிருஷ்ணகிரியில் தம்பியை குத்தி கொன்ற கொடூரம்!

image

கெலமங்கலத்தை சேர்ந்த சகோதரர்கள் சின்னசாமி (50), கோவிந்தசாமி (48), மாரியப்பன் (45) பழனி (40). சொத்தை பங்கு பிரிப்பதில் சகோதரர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இதில் பிப்ரவரி 4-ம் தேதி மாலை தம்பிகள் 3 பேர் சின்னசாமியிடம் நிலப்பத்திரம் கேட்டு தகராறு செய்தனர். இதில் சின்னசாமியின் மகன் ராஜசேகர் (26) கத்தியால் கோவிந்தசாமியை குத்தி கொலை செய்தார். கெலமங்கலம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News February 9, 2026

கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷ்ணகிரியில் மாவட்டத்துக்குட்பட்ட பென்னேஸ்வரம் மற்றும் பர்கூர் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (பிப்.9) காலை 9 முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பார்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, கரகுப்பம் மற்றும் காவேரிப்பட்டணம், தள்ளிஹல்லி, பென்னேஸ்வரம் மடம் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும். SHARE IT!

News February 9, 2026

கிருஷ்ணகிரி: கழுத்து அறுத்து கொடூர கொலை!

image

வேப்பனப்பள்ளியை சேர்ந்த மூதாட்டி சின்னம்மா (70). இவர் நேற்று (பிப்.8) மாலை கிராமத்தின் அருகே உள்ள செங்கல் சூளையில் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது காதுகளை வெட்டப்பட்டு, இரண்டு தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதயடுத்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 9, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அதன் சுற்றுவட்ட உள்ள பகுதிகளில் இரவு ரோந்து பணிக்கான காவலர்களின் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி அப்பகுதிகளில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையினரை அழைப்பதற்கு வசதியாக அவர்களின் அலைபேசி எண்கள் ஒடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் அறிந்துகொண்டு பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் அதை தவிர்க்க காவல்துறையினரை அழைக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஷேர்!

error: Content is protected !!