News March 21, 2025
கிருஷ்ணகிரியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 22, 2025
ஓசூரில் ரசாயன கலந்த 6 டன் தர்பூசணி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்யப்பட்ட 6 டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடுவது புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தர்பூசணியில் ரசாயனம் கலந்துள்ளதா என்பதை மக்கள் கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 22, 2025
குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
News March 22, 2025
கொடிக்கம்பங்களை ஏப்ரல் 28 க்குள் அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத கொடிக் கம்பங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய அறிவிப்புகள் அளித்து ,அதன் பிறகு அகற்ற வேண்டும். அகற்றுவதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வசூலித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.