News February 4, 2026

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 5, 2026

கிருஷ்ணகிரி: தூக்கி வீசப்பட்டு இருவர் பலி!

image

தேன்கனிக்கோட்டை அருகே பெரியதோகரையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரகள் ராமாச்சாரி (36), முனிராஜ் (37). கடந்த பிப்.3-ம் தேதி இரவு இருவரும் பைக்கில் தேன்கனிக்கோட்டையில் இருந்து தளி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரம் நின்ற லாரி மீது பைக் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேன்கனிக்கோட்டை போலீசார் லாரி டிரைவர் உபேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

News February 5, 2026

கிருஷ்ணகிரி: கழுத்தை நெரித்து கொன்ற கொடூர மனைவி!

image

ஒசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த தம்பதி பார்த்திபன் (32), அம்சவள்ளி (26). கடந்த பிப்.3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அம்சவள்ளி தனது இளைய மகனின் கண்முன்னே கணவரைக் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கணவன் தற்கொலை செய்ததாக நாடகமாடினார். உடம்பில் தற்கொலைக்கான காயம் இல்லாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதில் அம்சவள்ளி கணவரை கொன்றது தெரிய வந்தது.

News February 5, 2026

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று(பிப்.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!