News September 9, 2024

கிருமாம்பாக்கத்தில் மீனவர் தற்கொலை

image

கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன், மீனவர். இவர் கடலூர் வியாபாரி மணியிடம் ரூ.32 லட்சம் மதிப்பிலான மீன்களை அனுப்பியுள்ளார். அதற்கு ரூ.20 லட்சம் மட்டும் முருகனிடம் கொடுத்தார். மீதி பணத்தை கேட்டபோது மணி அலைக்கழித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), Station Controller 368 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 15, 2025

மத்திய அமைச்சரை வரவேற்ற புதுவை அமைச்சர்

image

புதுச்சேரியில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டியா, அர்ஜுன் ராம் மேக்வால், அமைப்பு செயலாளர் சப்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை, அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

News September 15, 2025

புதுச்சேரி: காருக்குள் ஆண் சடலம்-போலீசார் விசாரணை

image

புதுச்சேரி அண்ணா நகர் முதல் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து காருக்குள் சடலத்தை வைத்தனரா? அல்லது மது போதையில் காருக்குள் சென்று இறந்து கிடந்தாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!