News April 25, 2025
கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு

தமிழக அரசு சுதந்திர தினம், குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் மே.1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டங்களில் கடந்த ஆண்டின் வரவு, செலவு கணக்குகளை மக்கள் முன் பார்வைக்காக வைக்கவும், தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
இலவச பஸ் பாஸ் பெற அழைப்பு

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள பார்வைத்திறன், காது குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது. இதை பெற, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
News April 25, 2025
கோவைக்கு வரும் விஜய்!

தவெக பூத் கமிட்டி மாநாடு நாளை ஏப்.26, நாளை மறுநாள் ஏப்.27 ஆகிய தேதிகளில் கோவை, குரும்பபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து நாளை காலை 08:30 மணியளவில், கோவை விமானம் நிலையத்திற்கு வருகை தர உள்ளார். எனவே, அவரை வரவேற்பதற்காக, கோவை மாவட்ட தவெக கட்சி செயலாளர்கள் சார்பாக, நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
இலவச பயிற்சி வகுப்புகள்

கோவையில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26ஆம் தேதி முதல் துடியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் நடைபெறுகின்றன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க மே.3ஆம் தேதி கடைசி ஆகும். போலீஸ் ஆக விரும்பும் நபர்கள் இப்பயற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.