News April 29, 2025
கிராம சபைக் கூட்டம் குறித்து அறிவித்த ஆட்சித்தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற மே1 தொழிலாளர் தினத்தன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் சொன்ன GOOD NEWS!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வருகிற நவம்பர் மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதி ஆகிய நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று குடிமை பொருட்கள் (ரேஷன் கடைகளில் மானிய விலையில் கிடைக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட உள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூகவலை தளத்தில் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
கிருஷ்ணகிரி:நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ( நவம்பர் 1 ) இன்று காலை 9 முதல் 4 மணி வரை 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் இம் மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (31.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


