News April 1, 2024

கிராம உதவியாளர் பணி நிறைவு பாராட்டு விழா

image

வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம் படூர் கிராம உதவியாளர் சேகர் பணி நிறைவு பாராட்டு விழாவில் வட்டாட்சியர் பொன்னுசாமி, ஆ.தி.நலத்துறை வட்டாட்சியர் சத்யன், துணை வட்டாட்சியர் ஆனந்தகுமார், வட்ட உணவு வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித், கிராம நிர்வாக அலுவலர் பர்கத் நிஷா, இப்ராகிம், கிராம ஊழியர் சங்க தலைவர் ம.அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News

News August 15, 2025

தி.மலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்,

image

“திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்க ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் எல்.ஜெயசுதா, தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் தலைமையில் வழிநெடுகிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News August 15, 2025

இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 14/08/2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

புதிய மென்பொருள்; சேவை வழங்குவதில் கால தாமதம்

image

கடிதப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கணக்குகள் தொடர்பான புதிய மென்பொருள் இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஆகஸ்ட் 2, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும், இந்த புதிய மென்பொருள் பதிவுத் தபால் ரசீதுகள் மற்றும் சேமிப்பு பரிவர்த்தனைகளை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவைகளை விரைவாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!