News July 7, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 7, 2025
திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 29 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974590>>தொடர்ச்சி<<>>
News July 7, 2025
திண்டுக்கல்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பின் தங்கிய பகுதிகளான குஜிலியம்பாறை, நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. மேலும், உபகரணங்கள் செலவில் 50% ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் தொழில் மையம்( 8925533943)ஐ அணுகலாம்.
News July 7, 2025
திண்டுக்கல்: பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்!

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே நேற்று(ஜூலை 6) நடைபெற்ற வாரச் சந்தையில் வில்பட்டி ஊராட்சி, புலியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஜீப்பில் புலியூருக்கு திரும்பியபோது.
கோவில்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகிலுள்ள சுமாா் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜீப்பை ஓட்டிச் சென்ற குழந்தைராஜ் (38) உட்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.