News July 4, 2024
கிராமிய கலை பயிற்சி – ஆட்சியர் தகவல்

நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக தூத்துக்குடியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல், புலியாட்டம் போன்றவை பயிற்றுவிக்கப்பட உள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9487739296 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 14, 2025
தூத்துக்குடியில் சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை

தூத்துக்குடி தாளமுத்து நகர் அன்னை தெரேசா மீனவர் காலனியை சேர்ந்தவர் எட்வர்ட் மகன் வினிஸ்டன் (30). இவர் தாளமுத்து நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். தருவைகுளம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்க்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 13, 2025
தூத்துக்குடி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
தூத்துக்குடி: 3ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்கள்

தூத்துக்குடி அருகே குளத்தூர் தெற்கு பகுதியில் சுமார் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடுகள், இராமாயண நிகழ்வு சிற்பம், கடல் சிப்பிகளின் படிம எச்சங்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. ஆண்டுகள் நீண்ட நெடிய தொடர் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற சான்றாகலாம் என்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கூறினார். கடல் எச்சங்களினையும் தடையத்தை அழித்துவிடாமல் பாதுகாத்திட உத்தரவு இடவேண்டியும் தனது கோரிக்கை.