News October 23, 2024
கியாஸ் நுகர்வோர் கூட்டம் 28-ம் தேதி நடக்கிறது

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு (கியாஸ்) நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 28ம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 20ல்) நடக்கிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
திருப்பூர் மக்களே உஷார்: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.03), திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News December 3, 2025
காங்கேயம் அருகே சோக சம்பவம்!

காங்கேயம் அருகே நத்தக்காடையூர், மன்றாடியார்நகரை சேர்ந்தவர் பிரியா (30). கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு, 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் தந்தை வீட்டில் வசித்து வந்த பிரியா, தன்னை கவனிக்க ஆள் இல்லாத விரக்தியில், மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதில் பிரியா உயிரிழந்த நிலையில், 8 வயது மகள் ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 3, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 2.12.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .


