News March 22, 2024
கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

கரூர், கடவூர் சீலமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியசாமி. இவர் கடவூரில் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெரியசாமி நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
குளித்தலை முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

குளித்தலை முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வெள்ளியணை ராமநாதன், வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவர் 1962 ஆம் ஆண்டு தமது 26 வயதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்றபோது அதிக வாக்கு வித்தியாசத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற வேட்பாளராக நின்ற போது வெள்ளியணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
News January 21, 2026
கரூா் -சேலம் வழித்தட ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, கரூா் – திருச்சி பயணிகள் ரயில் (76810), மறுமாா்க்கமாக திருச்சி – கரூா் பயணிகள் ரயில் (76809), திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் (56105), மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811), மறுமாா்க்கமாக சேலம் – மயிலாடுதுறை விரைவு ரயில் (16812), ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் (56810) ஆகிய ரயில்கள் வரும் 27 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
JUST IN: கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும், வருகிற 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். இக்கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை மற்றும் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


