News April 12, 2025
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

நல்லகுட்லஅள்ளி பெரியண்ணன் தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்ற போது பாம்பை கண்டு பயந்து கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், சிகிச்சை பெற்ற பெரியண்ணன் உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவிட்டு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 21, 2025
தர்மபுரி உருவான வரலாறு!

தர்மபுரி மாவட்டம், அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அரூர் தாலுகாவை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. பின்னர், தர்மபுரி மாவட்டம் நிர்வாக காரணங்கள், அதிகமான கிராமங்கள் மற்றும் பரந்த பகுதி காரணமாக 09-02-2004 அன்று மீண்டும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க!
News September 21, 2025
தருமபுரி: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

தருமபுரி மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
4. விண்ணப்பிக்க இங்கே <
5. கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 21, 2025
தர்மபுரி: புரட்டாசி அமாவாசையில் இதை செய்யுங்க!

மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை திதியாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். தர்மபுரியில் தென்பெண்ணை ஆற்று கரைகள், ஒகேனக்கல் காவிரி ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் சமைத்த உணவை முதலில் காக்கைக்கு வைத்த பின்னரே மற்றவர்கள் உண்பது வழக்கம். ஷேர் பண்ணுங்க!