News December 20, 2024
கிணற்றில் தவறி விழுந்து தாய் குழந்தை உயிரிழப்பு

கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி கல்பனா நேற்று மதியம் 1 மணியளவில் கிணற்றிற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையுடன் கிணற்றில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் மீட்டுள்ளனர்.
Similar News
News August 5, 2025
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
News August 5, 2025
செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <