News April 1, 2025
கிணற்றில் குளிக்கச் சென்ற பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், தா.பேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரி (63) என்பவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றபோது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கிணற்றில் தவறி விழுந்துள்ளார். பின்னர் அவர் மூச்சு திணறி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தகவலின் பெயரில், தா.பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <
News January 28, 2026
திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

திருச்சி மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 28, 2026
திருச்சி: மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை

மணப்பாறை அடுத்த செவலூரைச் சேர்ந்த நவப்பிரியா என்பவருக்கும், அவரது மாமியார் செல்வராணிக்கும் நேற்று பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நவப்பிரியா தனது கணவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ மற்றும் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


