News November 24, 2025
கிணத்துக்கடவு: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கோவை, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அவ்வகையில் நேற்று 10 டன் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. பின், நடைபெற்ற ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட 1 பெட்டி தக்காளி ரூ.500 முதல் ரூ.900 வரை விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ ரூ.80-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 28, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்!

கோவையில் வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்க டிசம்பர் 4, 2025 கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வலியுறுத்தியுள்ளார். எனவே இறுதி நாள் வரை காத்திருக்காமல் விரைவில் படிவங்களை திரும்ப அளிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். SHARE பண்ணுங்க!
News November 28, 2025
கோவை: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

கோவை: மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் -1,2,3, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதூர் ரோடு ஒருபகுதி, அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, சித்தா புதுார், ஆவாரம்பாளையம் ஒருபகுதி, டாடாபாத், நுாறடி ரோடு, சிவானந்தா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை (நவ.29) மின்தடை அறிவிப்பு. SHARE IT!
News November 28, 2025
கோவை: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பகுதியை பொதுமக்கள், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து உடலை மீட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


