News May 30, 2024

காவேரி கூட்டு குடிநீர் இரண்டு நாள் நிறுத்தம்

image

இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), திருச்சி முத்தரசநல்லூர், தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நீரேற்றம் செய்யும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் 31.05.2024 மற்றம் 01.06.2024 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

Similar News

News September 12, 2025

ராமநாதபுரத்திற்கு வருகை தரும் செல்வ பெருந்தகை

image

வாக்கு திருட்டை தடுக்க அகில இந்திய மீனவர் காங். சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை திடலில் நாளை (13.9.2025) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் Ex. உள்துறை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஏற்பாடு செய்துள்ளார்.

News September 12, 2025

பரமக்குடியில் நிற்குமா வெளிமாநில ரயில்

image

பரமக்குடி ரயில் நிலையம் வணிக, கல்வி, சுற்றுலா ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிய நிலையமாக இருந்தும், வெளிமாநில விரைவு ரயில்கள் இங்கு நிற்கவில்லை. ஹூப்ளி, செகந்திராபாத், பெரோஷ்பூர், அயோத்யா, மங்களூர், கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் பரமக்குடியில் நிறுத்தப்பட வேண்டும் என பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 12, 2025

ராமநாதபுரம்: ஆபத்தில் உதவும் முக்கிய எண்

image

ராமநாதபுரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!