News August 19, 2024

காவிரி குடிநீர் 2 நாள் நிறுத்தம்: ராம்நாடு கலெக்டர்

image

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் நாளை(ஆக.,20) மாதாந்திர மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, நீர் செல்லும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை(ஆக.,20 ), நாளை மறுநாள்(ஆக.,21) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். SHARE IT.

Similar News

News September 8, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (செப்டம்பர்.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News September 8, 2025

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். நாளை காலை முதல் செப்.15ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்.25 முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும்.

News September 8, 2025

ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

image

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்யவும்<<>>. இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

error: Content is protected !!