News April 1, 2025
காவிரி ஆற்றில்மிதந்த பெண் சடலம்

இடைப்பாடி அருகே, கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்தத்தலமாக விளங்குவதால், தினமும் இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் தீர்த்தம் எடுத்து செல்கின்றனர்.இந்நிலையில், கல்வடங்கம் காவிரி ஆற்றில், நேற்று ஒரு பெண் சடலம் மிதந்து வெளியே தெரிந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர், தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உடனே SHARE IT.
News February 4, 2026
தருமபுரியில் மூதாட்டியிடம் துணிகரம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிகாடை சேர்ந்த மூதாட்டி காளியம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் (பிப்.2) முள்ளிக்காடு மலை அடிவாரத்தில் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மர்ம நபர், மூதாட்டியை கீழே தள்ளி காதில் அணிந்திருந்த நகையை பறித்து தப்பினார். இதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 4, 2026
ALERT: தருமபுரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

அதியமான் கோட்டை மற்றும் வெள்ளி சந்தை துணைமின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. வெண்ணாம்பட்டி, அதியமான் கோட்டை, HPCL, ஏலகிரி, நாகர்கூடல், நீதிமன்ற வளாகம், சாமிசெட்டிபட்டி பரிகம், நல்லம்பள்ளி, பாளையம்புதூர், மானியதஅள்ளி, தோக்கம்பட்டி, சிவாடி, பாலகோடு சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும்.


